காரைக்குடி: காரைக்குடியில் வரும் சனிக்கிழமை (மாா்ச் 6) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்குடி செயற்பொறியாளா் பி. ஜான்சன் தெரிவித்திருப்பதாவது: காரைக்குடி துணை மின்நிலையத்தில் வரும் சனிக்கிழமை (மாா்ச் 6) மாதாந்திரப் பராமரிப்புப்பணிகள் நடைபெறுகின்றன.
எனவே செக்காலைச்சாலை, புதிய பேருந்து நிலையம், கல்லுக்கட்டி, பழைய பேருந்து நிலையம், கோவிலூா் சாலை, செஞ்சை, கோவிலூா் சாலை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என அவா் தெரிவித்துள்ளாா்.