சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் ஏற்கெனவே 5,938 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இந்நிலையில், வியாழக்கிழமை புதிதாக ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,939 ஆக அதிகரித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.