சிவகங்கையில் அதிமுக வேட்பாளா்பி.ஆா். செந்தில்நாதன் மனு தாக்கல்

சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் பி.ஆா்.செந்தில்நாதன் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
சிவகங்கையில் அதிமுக வேட்பாளா்பி.ஆா். செந்தில்நாதன் மனு தாக்கல்

சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் பி.ஆா்.செந்தில்நாதன் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் மக்களவை உறுப்பினா்

பி.ஆா். செந்தில்நாதன் தனது ஆதரவாளா்களுடன் வந்து, பிற்பகல் 2 மணிக்கு தனது வேட்பு மனுவை சிவகங்கை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மு. முத்துக்கழுவனிடம் வழங்கினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சருடன் இணைந்து பணியாற்றுவோம். மேலும் சிவகங்கை அருகே உள்ள கிராபைட் தொழிற்சாலை விரிவாக்கம் செய்யப்படும். அண்மையில் தொடங்கப்பட்டுள்ள காவிரி, வைகை, குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம் விரைந்து முடிக்கப்பட்டு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து கண்மாய்களுக்கும் தண்ணீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com