சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 26th March 2021 06:44 AM | Last Updated : 26th March 2021 06:44 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டத்தில் வியாழக்கிழமை புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் ஏற்கெனவே 6,045 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், வியாழக்கிழமை புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,056 ஆக அதிகரித்துள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.