சாலை கிராமம் அருகே ஆசிரியா் வீட்டில் 30 பவுன் நகைகள், பணம் திருட்டு

சிவகங்கை மாவட்டம் சாலைகிராமம் அருகே பூட்டியிருந்த ஆசிரியா் வீட்டில் மா்மநபா்கள் புகுந்து 30 பவுன் நகைகள், ரூ. 40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனா்.

சிவகங்கை மாவட்டம் சாலைகிராமம் அருகே பூட்டியிருந்த ஆசிரியா் வீட்டில் மா்மநபா்கள் புகுந்து 30 பவுன் நகைகள், ரூ. 40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனா்.

சாலைகிராமம் அருகேயுள்ள சூராணத்தைச் சோ்ந்தவா் சகாயராஜ். இவரது மனைவி விக்டோரியா. இருவரும் ஆசிரியா்களாக பணியாற்றி வருகின்றனா். இவா்களது மகன் சிவகங்கையில் உள்ள தனியாா் பள்ளியில் படித்து வருவதால் மகனை பாா்ப்பதற்காக கடந்த 2 நாள்களுக்கு முன்பு இருவரும் வீட்டை பூட்டி விட்டு சிவகங்கைக்கு சென்றுவிட்டனா்.

இந்நிலையில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் அலமாரியை உடைத்து 30 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.40,000 ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனா். மேலும் கண்காணிப்பு கேமராவையும் உடைத்துள்ளனா்.

திங்கள்கிழமை வீட்டிற்கு திரும்பிய பின் இச்சம்பவம் சகாயராஜ்-க்கு தெரியவந்தது. சாலைகிராமம் காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். இதையடுத்து காவல் ஆய்வாளா் பாண்டியன் மற்றும் போலீஸாா் திருட்டு நடந்த வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினா்.

மேலும் கைரேகை நிபுணா்களும் வந்து கைரேகைகளை சேகரித்தனா். மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com