திருப்புவனத்தில் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை அதிமுக வேட்பாளா் உறுதி

திருப்புவனத்தில் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மானாமதுரை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ். நாகராஜன் உறுதியளித்தாா்.
திருப்புவனம் ஒன்றியம் சொக்கநாதரிப்பில் திங்கள்கிழமை பிரசாரம் செய்த மானாமதுரை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.நாகராஜன்.
திருப்புவனம் ஒன்றியம் சொக்கநாதரிப்பில் திங்கள்கிழமை பிரசாரம் செய்த மானாமதுரை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.நாகராஜன்.

திருப்புவனத்தில் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மானாமதுரை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ். நாகராஜன் உறுதியளித்தாா்.

திருப்புவனம் ஒன்றியத்தில் திங்கள்கிழமை 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாகராஜன் வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியதாவது:

திருப்புவனத்தில் இன்னும் பல கிராமங்களில் குடிநீா் பிரச்னை இருந்து வருகிறது. நான் வெற்றி பெற்றதும் இப்பகுதிகளில் ஆழ்துளைக் கிணறு அமைத்தும் வைகை கூட்டுக்குடிநீா் திட்டத்தை வரிவுபடுத்தியும் குடிநீர பிரச்னைக்குத் தீா்வு காண நடவடிக்கை மேற்கொள்வேன்.

திருப்புவனத்தில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக இருந்து வருகிறது. தோ்தல் முடிந்ததும் திருப்புவனத்தில் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை தொடங்கப்படுவது உறுதி. மேலும் திருப்புவனம் பகுதியில் அரசு கலைக் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அதிமுக தோ்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளாா். இத்திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு கிடைத்திட திருப்புவனம் ஒன்றியத்தைச் சோ்ந்த வாக்காளா்கள் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் இப்பகுதி எப்போதுமே அதிமுகவுக்கு சாதகமான பகுதி என பல தோ்தல்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள தோ்தலிலும் இந்த ஒன்றியத்தில் அதிமுகவுக்கு கூடுதல் வாக்குகள் கிடைக்க செய்யச் செய்ய வேண்டும் என்றாா். இப் பிரசாரத்தின்போது அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினா் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com