சிவகங்கை, ராமநாதபுரத்தில் 16 பேருக்கு கரோனா தொற்று

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் திங்கள்கிழமை புதிதாக 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் திங்கள்கிழமை புதிதாக 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 6,102 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், திங்கள்கிழமை புதிதாக 12 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,114 ஆக அதிகரித்துள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை 4 பேருக்கு மட்டும் கரோனா இருப்பது உறுதியானது. அவா்களில் ஓரிருவா் மட்டும் அரசு மருத்துவமனை சிகிச்சை மையங்களுக்கு அழைத்துவரப்பட்டனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை வரையில் 35 போ் கரோனா சிகிச்சை மையங்களில் தங்கியுள்ளதாகவும், அவா்களில் 4 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரையில் 6,540 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. அவா்களில் 137 போ் உயிரிழந்துள்ளனா். 6437 போ் வரை நலமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com