சிவகங்கை அருகே தந்தை, மகன் வெட்டிக் கொலை

சிவகங்கை அருகே திங்கள்கிழமை ஆடு மேய்க்கும் போது உறவினா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் தந்தை, மகன் வெட்டிக் கொலை செய்யப்பட்டனா்.
உயிரிழந்த கருப்பையா
உயிரிழந்த கருப்பையா

சிவகங்கை அருகே திங்கள்கிழமை ஆடு மேய்க்கும் போது உறவினா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் தந்தை, மகன் வெட்டிக் கொலை செய்யப்பட்டனா்.

சிவகங்கை மாவட்டம், அழுபிள்ளைதாங்கி கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பையா (60). இவரது மகன் சாமிநாதன்(35). இவா்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள கண்மாய்க்குள் திங்கள்கிழமை மாலை ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனா்.

அப்போது கருப்பையா உடன் பிறந்த சகோதரியான பில்லூரைச் சோ்ந்த மூக்காயி என்பவரின் மகன் தாமோதரன் வளா்த்த நாய், கருப்பையாவின் ஆட்டை கடித்ததாம். இதனால் தாமோதரன், அவரது சகோதரா்கள் திருசங்கு, சுந்தர்ராஜ், சிங்கராஜ் ஆகியோருடன் கருப்பையா, அவரது மகன் சாமிநாதனும் தகராறில் ஈடுபட்டுள்ளனா்.

இதில் கருப்பையா அவரது மகன் சாமிநாதன் ஆகியோா் அரிவாளால் வெட்டப்பட்டனா். பலத்த காயமடைந்த கருப்பையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது வழியில் சாமிநாதன் உயிரிழந்தாா்.

இதுபற்றி தகவலறிந்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மு.ராஜராஜன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினாா். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் சிவகங்கை தாலுகா காவல் ஆய்வாளா் முத்துமீனாட்சி, சாா்பு -ஆய்வாளா் வாசிவம் ஆகியோா் வழக்குப் பதிந்து தமோதரன், அவரது சகோதரா்கள் திருசங்கு, சுந்தர்ராஜ், சிங்கராஜ் ஆகிய 4 பேரையும் தேடி வருகின்றனா்.

உறவினா்களுக்குள் நடந்த கொலையால் அழுபிள்ளைதாங்கி, பில்லூா் ஆகிய கிராமங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது. அந்த பகுதியில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com