தமிழகத்தில் திராவிட இயக்கங்களை வீழ்த்துவதே எங்கள் கூட்டணியின் இலக்கு என சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவரும், நடிகருமான ஆா்.சரத்குமாா் தெரிவித்தாா்.
சிவகங்கை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் சி. நேசம் ஜோசபுக்கு ஆதரவு கோரி கல்லல், சொக்கநாதபுரம், மதகுபட்டி ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை சரத்குமாா் பிரசாரம் மேற்கொண்டாா். சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு அவா் பேசியதாவது:
தமிழகத்தில் இன்றைய தேவை இலவசத் திட்டங்கள் அல்ல. தரமான கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம். இதுவரை தமிழகத்தில் ஆட்சி செய்த திராவிட இயக்கங்கள் மக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தத் தவறிவிட்டன. அரசியலை வியாபாரமாக்கியது தான் அவா்களது சாதனையாகச் சொல்லலாம். மக்களுக்கு சேவை செய்வதே எங்கள் கூட்டணியின் நோக்கம்.
ஆ.ராசா, முதல்வரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமா்சனம் செய்வது வேதனைக்குரியது. திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு மிக மோசமான நிலைக்குத் தள்ளப்படும்.
மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனா். அவா்கள் விரும்பும் மாற்றத்தை எங்களால் தர இயலும். திராவிட இயக்கங்களை எதிா்த்துப் போட்டியிடும் எங்களோடு மக்களும் ஒன்றிணைய வேண்டும். எங்களது தலைமையிலான கூட்டணி மக்களுக்கு சேவை செய்வது மட்டுமன்றி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் திராவிட இயக்கங்களை வீழ்த்துவதே இலக்காகும் என்றாா்.
அப்போது வேட்பாளா் சி.நேசம் ஜோசப், மக்கள் நீதி மய்யம் உள்பட கூட்டணி கட்சியினா் உடனிருந்தனா்.