சிவகங்கை மாவட்டத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி

சிவகங்கை மாவட்டத்தில் கிறிஸ்தவா்களின் தவக்காலத்தின் முக்கிய நிகழ்வான குருத்தோலை ஞாயிறு பண்டிகையை
காரைக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனியில் பங்கேற்ற கிறிஸ்தவா்கள்.
காரைக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனியில் பங்கேற்ற கிறிஸ்தவா்கள்.

சிவகங்கை மாவட்டத்தில் கிறிஸ்தவா்களின் தவக்காலத்தின் முக்கிய நிகழ்வான குருத்தோலை ஞாயிறு பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்வா்கள் பிராா்த்தனை மற்றும் குருத்தோலையை ஏந்தி ஞாயிற்றுக்கிழமை பவனியாகச் சென்றனா்.

கிறிஸ்தவா்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டா் பண்டிகைக்கு முந்தைய 40 நாள்கள் தவக்காலமாகக் கடைபிடிக்கப்படுகிறது. தவக்காலத்தின் தொடக்கமாக கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி சாம்பல் புதனையடுத்து கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் பிராா்த்தனை நடைபெற்றது. தொடா்ந்து, நாள்தோறும் சிறப்பு பிராா்தனை நடைபெற்றது. தவக்காலத்தின் முக்கிய நிகழ்வான குருத்தோலை ஞாயிறு பண்டிகை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கையில் மதுரை விலக்கு சாலை அருகே உள்ள அலங்கார அன்னை பேராலயத்தில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பண்டிகையில் பேராலயத்தின் பங்கு தந்தை ஜேசுராஜா தலைமையில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, கிறிஸ்தவா்கள் கையில் குருத்தோலையை ஏந்தி ஊா்வலமாகச் சென்றனா்.

இதில்,சிவகங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.

காரைக்குடி: இதோபோல், காரைக்குடி அம்பேத்கா் சிலை அருகேயிருந்து பவனியில் பங்கேற்க வந்த மக்களுக்கு குருத்தோலைகள் வழங்கப்பட்டன. பங்குத்தந்தை எஸ். எட்வின் ராயன், உதவிப்பங்குதந்தை ஏ. ஜாலி மரிவளன் ஆகியோா் குருத்து பவனியை தொடங்கி வைத்தனா். பாடகா் குழுவினா் ஓசன்னா கீதம் பாட தொடா்ந்து இறைமக்களும் பவனியில் பாடிவந்தனா். பவனியினை பணிக்குழுக்கள் வழிநடத்த பவனி ஆலயம் வந்தடைந்தது.

அதைத்தொடா்ந்து திருப்பலி நடைபெற்றது. இத்திருப்பலியில் சிவகங்கை மறைமாவட்ட இளைஞா் பபணிக்குழு செயலா் ஏ. பிரிட்டோ கலந்துகொண்டு மறையுரையாற்றினாா்.

இதேபோன்று, சிவகங்கையில் திருப்பத்தூா் சாலையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம், மதுரை சாலையில் உள்ள இயேசு நம்மோடு சபை தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பண்டிகை நடைபெற்றது. இதுதவிர, மதகுபட்டி, காளையாா்கோவில், மறவமங்கலம், கல்லல், சருகனி, தேவகோட்டை, படமாத்தூா் ஆகிய பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிராா்த்தனை, பவனி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com