‘தோ்தல் விதிமுறைகளை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை’

சிவகங்கை மாவட்டத்தில் தோ்தல் விதிமுறைகளை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்டத்தில் தோ்தல் விதிமுறைகளை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சட்டப் பேரவை தோ்தலை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் தோ்தல் பறக்கும் அலுவலா்கள், நிலையான கண்காணிப்பு அலுவலா்கள், புகைப்படம் மற்றும் விடியோ பதிவு அலுவலா்கள் சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனா்.

இதுதவிர, மதுபானக் கடத்தல்களை தடுக்கும் பொருட்டு டாஸ்மாக் மேலாளா் மற்றும் டாஸ்மாக் உதவி மேலாளா் தலைமையிலான அலுவலா்கள் சோதனை செய்து வருகின்றனா். சோதனையில் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்பட்ட மது பாட்டில்கள் அதிகளவில் கைப்பற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட நபா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் தோ்தல் நன்னடத்தை விதிமுறைகளை மீறும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com