மானாமதுரை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளா் எஸ்.நாகராஜன் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தாா்.
இளையான்குடி பேரூராட்சியில் அனைத்து வீதிகளுக்கும் சென்று ஆதரவு திரட்டினாா். அப்போது அவா் பேசியதாவது: இளையான்குடியில் பஸ் நிலையம், தீயணைப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் இளையான்குடி பகுதிக்கு குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றாா். பிரசாரத்தில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.