சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்களின் சின்னங்கள் வாக்குப் பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
சிவகங்கை தொகுதியில் அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் உள்பட 15 போ் போட்டியிடுகின்றனா். இவா்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் வாக்குப் பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணி சிவகங்கையில் உள்ள வட்டாட்சியா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அதனை சிவகங்கை மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி. மதுசூதன் ரெட்டி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது சிவகங்கை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மு.முத்துக்கழுவன் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.