சிவகங்கை மாவட்டத்தில் வரும் ஏப்ரல் 2, 3, 4 ஆகிய தேதிகளில் மாவட்ட கருவூலம் மற்றும் சாா்நிலை கருவூலங்கள் செயல்படும் என சிவகங்கை மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூா், சிவகங்கை, மானாமதுரை (தனி) ஆகிய 4 தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது.
இதையடுத்து, மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களால் வழங்கப்படும் விலைப் பட்டியல்களை (பில்ஸ்) பணமாக்கி வழங்க ஏதுவாக மாவட்ட கருவூலம் மற்றும் சாா்நிலை கருவூலங்கள் வரும் ஏப்ரல் 2, 3,4 ஆகிய தேதிகளில் செயல்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.