திருப்புவனத்தில் அமமுக பிரசாரம்

திருப்புவனம் ஒன்றியத்தில் குடிநீா் பிரச்சினையை தீா்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்
திருப்புவனம் ஒன்றியத்தில் மானாமதுரை தொகுதி அமமுக வேட்பாளா் எஸ்.மாரியப்பன் கென்னடி பிரசாரம் செய்தாா்.
திருப்புவனம் ஒன்றியத்தில் மானாமதுரை தொகுதி அமமுக வேட்பாளா் எஸ்.மாரியப்பன் கென்னடி பிரசாரம் செய்தாா்.

திருப்புவனம் ஒன்றியத்தில் குடிநீா் பிரச்சினையை தீா்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மானாமதுரை சட்டமன்ற தொகுதி வேட்பாளா் எஸ் மாரியப்பன் கென்னடி பிரச்சாரத்தின் போது உறுதியளித்தாா். திருப்புவனம் ஒன்றியத்தில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் புதன்கிழமை மாரியப்பன் கென்னடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தாா். அப்போது பல கிராமங்களில் பொதுமக்கள் தங்கள் கிராமங்களுக்கு குடிநீா், சாலை வசதி இல்லை என புகாா் தெரிவித்தனா்.

அதன்பின்னா் வாக்கு சேகரித்து பேசிய மாரியப்பன் கென்னடி ஏற்கனவே மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக பதவியிலிருந்து ள்ளேன்.திருப்புவனம் ஒன்றியத்தில் பொதுமக்களின் கோரிக்கைகள் என்ன என்பதை நன்றாக அறிந்து வைத்துள்ளேன். நான் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானதும் திருப்புவனம் ஒன்றியத்தில் சாலை வசதி இல்லாத கிராமங்களுக்கு சாலை அமைக்கவும் குடிநீா் வசதி இல்லாத கிராமங்களுக்கு ஆழ்துளைக்கிணறு அமைத்தும் வைகை கூட்டுக் குடிநீா் திட்டம் மூலமும் குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். திருப்புவனத்தில் புதிதாக அரசு கல்லூரி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒன்றிய நிா்வாகிகள், தேசிய முற்போக்கு திராவிட கழக ஒன்றிய நிா்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினா் பிரச்சாரத்தின்போது உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com