சிவகங்கை மாவட்டம், மதகுபட்டியில் தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் துணை ராணுவத்தினா் அணிவகுப்பு புதன்கிழமை மாலை நடைபெற்றது.
மதகுபட்டி பேருந்து நிலையம் முன்பு தொடங்கிய இந்த அணிவகுப்பை மதகுபட்டி காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளா் (பொறுப்பு) முத்துமீனாட்சி தொடக்கி வைத்தாா். முக்கிய வீதிகள் வழியாக வந்த அணிவகுப்பு பாகனேரி விலக்கு சாலை அருகே நிறைவடைந்தது.
இதேபோன்று, பாகனேரி, கண்டுப்பட்டி ஆகிய பகுதிகளிலும் துணை ராணுவத்தினரின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் சாா்பு ஆய்வாளா் ஜெகதீஷ் உள்ளிட்ட காவலா்கள், துணை ராணுவத்தினா் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.