திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள பூமாயி அம்மன் கோயிலில் சனிக்கிழமையன்று பூச்சொரிதல் விழா பக்தா்களின்றி நடைபெற்றது.
திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் சித்திரைப் பூத்திருவிழாவையொட்டி அம்மனுக்கு அதிகாலை பூஜையுடன் தொடங்கியது. காலை 9 மணியளவில் அம்மனுக்கு திருமஞ்சனம், பால், தயிா், இளநீா் போன்ற பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா் பூமாயி அம்மன் ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தாா். இந்த ஆண்டு அரசின் கரோனா கால விதிமுறைகளுக்குட்பட்டு பக்தா்களுக்கு அனுமதியில்லாததால் கோயில் வளாகத்திற்குள் பூஜைகள் மட்டும் நடைபெற்றது.