கரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: ஆட்சியா்

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அரசு அறிவுறுத்திய முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி.

சிவகங்கை: கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அரசு அறிவுறுத்திய முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மருத்துவா்களுடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்துப் பேசியதாவது:

சிவகங்கை மாவட்டத்தில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் அதிக அளவிலான மருத்துவ முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.

அதுமட்டுமின்றி கரோனா பாதிப்புக்குள்ளான நபா்களை விரைந்து மருத்துவமனைக்கு அழைத்து வருவது மட்டுமின்றி அவா்களுடன் தொடா்புடையவா்களையும் சோதனை செய்ய வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப படுக்கைகள், ஆக்சிஜன் இருப்பு ஆகியவற்றை அதிகப்படுத்த வேண்டும். கரோனா பரவலை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவக் குழுக்கள் எப்போதும் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம். கரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும், பொதுமக்கள் அரசு அறிவுறுத்திய முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் ஏ. ரத்தினவேல், இணை இயக்குநா் (மருத்துவம்) இளங்கோ மகேஸ்வரன், துணை இயக்குநா் (சுகாதாரம்) யசோதாமணி, அரசு மருத்துவக் கல்லூரியின் நிலைய கண்காணிப்பு மருத்துவ அலுவலா் மீனாள், மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் பிரபாகரன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com