கரோனா: புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் உதவி பெற செல்லிடப்பேசி எண் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் வசித்து வரும் புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் கரோனா காலத்தில் தங்களுக்கு தேவைப்படும் உதவிகளுக்கு

சிவகங்கை மாவட்டத்தில் வசித்து வரும் புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் கரோனா காலத்தில் தங்களுக்கு தேவைப்படும் உதவிகளுக்கு செல்லிடப்பேசி எண்ணில் அழைக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கையில் உள்ள மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) அலுவலகத்தில் புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் நலன் கருதி கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. எனவே கரோனா காலங்களில் உதவி தேவைப்படும் சிவகங்கை மாவட்டத்தில் வசித்து வரும் புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் 94424 18361, 95669 55059, 73970 20057 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com