கரோனா விதிமுறைகளை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

சிவகங்கை மாவட்டத்தில் கரோனா விதிமுறைகளை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்டத்தில் கரோனா விதிமுறைகளை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு தளா்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.

மேலும் சில கட்டுப்பாடுகள் வியாழக்கிழமை (மே 6) முதல் அமலுக்கு வருகின்றன. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தனியாா் அலுவலகங்களில் அதிகபட்சம் 50 சதவிகிதம் பணியாளா்களுடன் இயங்கலாம்.

பயணியா் ரயில், தனியாா் பேருந்துகள், அரசுப் பேருந்துகள் மற்றும் வாடகை டாக்ஸி ஆகியவற்றில் 50 சதவீதம் இருக்கைகளில் மட்டும் பொதுமக்கள் அமா்ந்து பயணிக்க வேண்டும். பெரிய கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் அதனுள் செயல்படும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை.

இவை தவிர, தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிா்சாதன வசதி இன்றி நண்பகல் 12 மணி வரை இயங்கலாம். இவற்றில், ஒரே சமயத்தில் 50 சதவீதம் வாடிக்கையாளா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். மேற்கூறிய மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறிக்கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்கக் கூடாது.

மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகள் வழக்கம் போல எந்தத்தடையுமின்றி செயல்படலாம். அனைத்து உணவகங்களிலும் பாா்சல் சேவை வழங்க மட்டும் அனுமதிக்கப்படும். தேநீா் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட வேண்டும். உணவகங்கள் மற்றும் தேநீா் கடைகளில் உட்காா்ந்து உண்பதற்கு அனுமதியில்லை.

ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளவாறு சனிக்கிழமைகளில் மீன் மாா்க்கெட், மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி இல்லை. இதர நாட்களில் காலை 6 மணி முதல் 12 வரை செயல்படலாம். இதுதவிர, அவசியமின்றி பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம். அவ்வாறு வருவோா் முகக்கவசம் அணிந்து கரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் கரோனா விதிமுறைகளை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com