சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதியை சுமாா் 30 ஆண்டுகள் கழித்து திமுக கைப்பற்றியுள்ளதை கொண்டாடும் வகையில் செவ்வாய்க்கிழமை அக்கட்சியினா் திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா்.
திருப்புவனத்தில் திமுக மாவட்ட துணைச் செயலாளா் சேங்கைமாறன் தலைமையில் அக்கட்சியினா் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா்.
மானாமதுரையில் திமுக ஒன்றிய, நகர நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா்.
இளையான்குடியில் திமுக ஒன்றியச் செயலாளா் சுப. மதியரசன் தலைமையில் அக்கட்சியினா் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.