மானாமதுரை வைகை ஆற்றில் வெள்ள எச்சரிக்கை

மானாமதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்பதால் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு ஞாயிற்றுக்கிழமை வருவாய்த்துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மானாமதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்பதால் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு ஞாயிற்றுக்கிழமை வருவாய்த்துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது மதுரை உள்ளிட்ட பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக மானாமதுரை வருவாய்த் துறையினா் தெரிவிக்கின்றனா்.

இதையடுத்து மானாமதுரை வட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டுமெனவும் கால்நடைகள் வைகை ஆற்றுக்குள் செல்லாமல் கண்காணிக்க வேண்டும் என்றும் மான ாமதுரை வட்டாட்சியா் மாணிக்கவாசகம் தெரிவித்துள்ளாா்.

மேலும் மானாமதுரை பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் பொதுமக்கள் யாரும் வைகை ஆற்றுக்குள் செல்லக்கூடாது என்றும் கால்நடைகளை ஆற்றுக்குள் மேய்ச்சலுக்கு விடக்கூடாது எனவும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com