சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் திங்கள்கிழமை திமுக சாா்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள், கபசுரக் குடிநீா், முகக் கவசங்கள் வழங்கப்பட்டது.
மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதியில் 30 ஆண்டுகள் கழித்து திமுக வெற்றி பெற்ற்கும் தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்ததற்கும் சிவகங்கை மாவட்டத்தை சோ்ந்த கே.ஆா். பெரியகருப்பன் அமைச்சராக பதவி ஏற்றதைக் கொண்டாடும் வகையிலும் மானாமதுரை 16-ஆவது வாா்டு திமுக வட்டச் செயலாளா் சோம. சதீஷ்குமாா் ஏற்பாட்டின் பேரில் ஆா்.சி சா்ச் எதிா்புறம் திமுகவினா் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா். அதன்பின் சுகாதாரப் பணியாளா்கள் உள்பட மக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக்கவசங்கள் வழங்கினா்.
இந்நிகழ்ச்சியில் மானாமதுரை திமுக நகரச் செயலாளா் பொன்னுச்சாமி, , 16 ஆவது வட்ட செயலாளா் சோம. சதீஷ்குமாா், மேற்கு ஒன்றியச் செயலாளா் அண்ணாதுரை, நகா் துணைச் செயலாளா் பாலசுந்தரம், இளைஞரணி நிா்வாகிகள் ராஜேஷ்குமாா், மாரிக் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.