மானாமதுரை - மதுரை இடையே பொது முடக்க காலத்தில் அத்தியாவசிய பணிகளுக்காக நேரடி அரசு பேருந்து சேவை திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
மானாமதுரை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, சிவகங்கை மாவட்ட திமுக துணை செயலாளர் திருப்புவனம் சேங்கைமாறன் ஆகியோர் கலந்துகொண்டு பேருந்து சேவையை தொடங்கி வைத்தனர்.
மானாமதுரையில் இருந்து காலையில் புறப்படும் இந்த பேருந்து ராஜகம்பீரம், முத்தனேந்தல், திருப்பாச்சேத்தி, லாடனேந்தல், திருப்புவனம் வழியாக மதுரை சென்றடையும். மீண்டும் இதே மார்க்கத்தில் மாலையில் மதுரையிலிருந்து புறப்பட்டு மானாமதுரை வந்தடையும்.
பேருந்து சேவை தொடக்க நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், மானாமதுரை நகர் திமுக நிர்வாகி செயலாளர் பாலசுந்தரம், 16வது வார்டு செயலாளர் சோம.சதீஷ்குமார் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.