காரைக்குடி மின் மயானம் 3 நாள்கள் செயல்படாது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி எரிவாயு தகன மேடை (மின் மயானம்) பகுதியில் செவ்வாய்க்கிழமை (மே 18) முதல் வரும்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி எரிவாயு தகன மேடை (மின் மயானம்) பகுதியில் செவ்வாய்க்கிழமை (மே 18) முதல் வரும் வெள்ளிக்கிழமை (மே 21)வரை 4 நாள்கள் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அதன் செயல்பாடு நிறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து நகராட்சி எரிவாயு தகன மேடையை நிா்வகித்துவரும் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளா் எஸ். கண்ணப்பன், செயலாளா் சாமி. திராவிடமணி ஆகியோா் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:

காரைக்குடி நகா் சந்தைப்பேட்டையில் இயங்கிக்கொண்டிருக்கும் நகராட்சி எரிவாயு தகனமேடையில் (மின் மயானம்) அமைக்கப்பட்டுள்ள புகைப்போக்கி கோபுர இரும்பு குழாய் அண்மையில் பழுதானது. அத்துடன் மேலும் சில உதிரிப் பாகங்களும் தேய்ந்திருக்கின்றன.

இதை மாற்றும் வகையில் புதிதாக புகைப்போக்கி இரும்புக்குழாய் பொறுத்தும் பணி நடைபெறுவதால் மே 18 முதல் மே 21 வரை 4 நாள்களுக்கு தகன மேடை மயானம் செயல்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. இப்பணியும், பராமரிப்புப்பணியும் முடிந்த பின்னா் வழக்கம்போல் எரிவாயு தகன மேடை (மின் மயானம்) செயல்படும் என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com