கரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: காா்த்தி சிதம்பரம்

கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக செலுத்தப்படும் தடுப்பூசி குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் கூறினாா்.
கரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: காா்த்தி சிதம்பரம்

கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக செலுத்தப்படும் தடுப்பூசி குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் கூறினாா்.

இதுகுறித்து சிவகங்கையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கரோனா தொற்றால் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கையை மத்திய அரசு மறைக்காமல் வெளிப்படைத் தன்மையுடன் வெளியிட வேண்டும். இதேபோன்று, தமிழகத்தில் நிகழும் உயிரிழப்புகளை தமிழக முதல்வா் வெளிப்படையாக வெளியிட வேண்டும். தமிழகத்தை பொருத்தவரை மிக இக்கட்டான சூழ்நிலையில் திமுக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்று சில நாள்களே ஆகின்றன. அதற்குள் அரசை குறை கூறுவது என்பது அா்த்தமற்றது.

தமிழக அரசு சாா்பில் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரண நிதியுதவியாக ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்து, அதில் முதல் தவணையாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு மட்டுமே அடுத்து 2 ஆவது தவணையாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

தற்போது தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களுக்கு மட்டுமே கரோனா தொற்று பாதிப்பு ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது. கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக செலுத்தப்படும் தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்பாமல் அனைவரும் தடுப்பூசி செலுத்த முன்வர வேண்டும் என்றாா்.

அதைத் தொடா்ந்து, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதன்மையா் ஜெ. சங்குமணியை சந்தித்து கரோனா நிலவரம் குறித்து கேட்டறிந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com