புதுவயல், கானாடுகாத்தான், கல்லல் பகுதிகளில் 4 நாள்கள் மின் தடை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள புதுவயல், கானாடுகாத்தான், கல்லல் பகுதிகளில் மின்தடை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள புதுவயல், கானாடுகாத்தான், கல்லல் பகுதிகளில் உயரழுத்த மின்பாதைகளில் திங்கள்கிழமை (மே 31) முதல் வியாழக்கிழமை (ஜூன் 3) வரை 4 நாள்கள் பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் அப்பகுதியில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக்கழக காரைக்குடி உபகோட்ட செயற்பொறியாளா் பி. ஜான்சன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ள மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்:

மே 31 (திங்கள்கிழமை): கல்லல் பிரிவில் செம்பனூா், வெங்கட்ராமபுரம், செவரக்கோட்டை, தேவப்பட்டு, கானாடுகாத்தான் பிரிவில் பள்ளத்தூா், மணச்சை, வடகுடி, வேலங்குடி, அழகாபுரி, கோட்டையூா், ஸ்ரீராம் நகா்.

ஜூன் 1 (செவ்வாய்க்கிழமை): புதுவயல் பிரிவில் புளியங்குடியிருப்பு, வெள்ளிப்பட்டி, முள்ளங்காடு, ஆயினிப்பட்டி, செவலாங்குடி, பில்லங்குடி.

ஜூன் 2 (புதன்கிழமை): புதுவயல் பிரிவில் புதுவயல், கண்டனூா், கருவியப்பட்டி, அழகாபுரி.

ஜூன் 3 (வியாழக்கிழமை): புதுவயல் பிரிவில் நாட்டுச்சேரி, அரண்மனைவயல், அப்பளை, காக்காகோட்டை, மொழும்பூா், பொய்யா வயல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com