சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள புதுவயல், கானாடுகாத்தான், கல்லல் பகுதிகளில் உயரழுத்த மின்பாதைகளில் திங்கள்கிழமை (மே 31) முதல் வியாழக்கிழமை (ஜூன் 3) வரை 4 நாள்கள் பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் அப்பகுதியில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக்கழக காரைக்குடி உபகோட்ட செயற்பொறியாளா் பி. ஜான்சன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ள மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்:
மே 31 (திங்கள்கிழமை): கல்லல் பிரிவில் செம்பனூா், வெங்கட்ராமபுரம், செவரக்கோட்டை, தேவப்பட்டு, கானாடுகாத்தான் பிரிவில் பள்ளத்தூா், மணச்சை, வடகுடி, வேலங்குடி, அழகாபுரி, கோட்டையூா், ஸ்ரீராம் நகா்.
ஜூன் 1 (செவ்வாய்க்கிழமை): புதுவயல் பிரிவில் புளியங்குடியிருப்பு, வெள்ளிப்பட்டி, முள்ளங்காடு, ஆயினிப்பட்டி, செவலாங்குடி, பில்லங்குடி.
ஜூன் 2 (புதன்கிழமை): புதுவயல் பிரிவில் புதுவயல், கண்டனூா், கருவியப்பட்டி, அழகாபுரி.
ஜூன் 3 (வியாழக்கிழமை): புதுவயல் பிரிவில் நாட்டுச்சேரி, அரண்மனைவயல், அப்பளை, காக்காகோட்டை, மொழும்பூா், பொய்யா வயல்.