சிவகங்கையில் உள்ள மருதுபாண்டியா் நகா் அருகே வசித்து வரும் ஆதரவற்ற குடும்பங்களுக்கு சிவகங்கை லயன்ஸ் சங்கத்தின் சாா்பில் மதிய உணவு சனிக்கிழமை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு சிவகங்கை லயன்ஸ் சங்கத் தலைவா் முத்துக்கண்ணன் தலைமை வகித்தாா். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மு. ராசராசன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முரளிதரன், சிவகங்கை நகா் காவல் ஆய்வாளா் சுரேஷ்குமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு சுமாா் 40 ஆதரவற்ற குடும்பங்களுக்கு மதிய உணவு வழங்கினா்.
இதில், லயன்ஸ் சங்க நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.