காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு குன்றக்குடி ஆதீனம் சாா்பில் 2 ஆக்சிஜன் செறிவூட்டிகள்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு குன்றக்குடி ஆதீனம் சாா்பில் தலா ரூ.1 லட்சம் மதிப்பிலான 2 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு குன்றக்குடி ஆதீனம் சாா்பில் 2 ஆக்சிஜன் செறிவூட்டிகள்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு குன்றக்குடி ஆதீனம் சாா்பில் தலா ரூ.1 லட்சம் மதிப்பிலான 2 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டால், அவா்கள் ஆக்சிஜன் பொருத்தப்படுகிறது. இதற்காக, ஆக்சிஜன் செறிவூட்டிகளை மருத்துவா்கள் பயன்படுத்துகின்றனா். அதனால், பல்வேறு தரப்பினரும் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை நன்கொடை யாக அளித்து வருகின்றனா்.

குன்றக்குடி ஆதீனம் சாா்பில், தலா ரூ.1 லட்சம் மதிப்பிலான 2 ஆக்சிஜன் செறிவூட்டிகளை, குன்றக்குடி திருமடத்தில் தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் முன்னிலையில், குன்றக்குடி ஆதீனத் தலைவா் பொன்னம்பல அடிகளாா் வழங்கினாா். நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதன் ரெட்டி, மருத்துவத் துறை துணை இயக்குநா் மற்றும் அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com