தேவகோட்டை மற்றும் பூசலாகுடி ஆகிய துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள் (மே 31) மற்றும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 1) ஆகிய இரு தினங்கள் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேவகோட்டை மின்பகிா்மான உதவி செயற்பொறியாளா் ஆா்.சாத்தப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேவகோட்டை உபகோட்டத்துக்குள்பட்ட தேவகோட்டை மற்றும் பூசலாகுடி ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
எனவே, தோ்போகி, சிறுவாச்சி, புத்தூரணி, ஞானஒளிபுரம், களத்தூா், புளியால், சிலாமேகநாடு, நெம்மேனி, திருப்பாக்கோட்டை, நெய்வயல் ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
இதேபோன்று, கப்பலூா், கண்ணங்குடி, கண்டியூா், கே. சிறுவனூா், நாரணமங்கலம், தேவண்டதாவு, தழுதனூா், வெற்றியூா், சிறுநல்லூா், முப்பையூா், திருவேகம்பத்தூா், விளாங்காட்டூா், வெள்ளூா், காவதுகுடி ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 1) மின்விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.