சிவகங்கை நகா் பகுதியில் திங்கள்கிழமை (நவ.1) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் மின்விநியோகம் இருக்காது.
இதுகுறித்து சிவகங்கை மின் பகிா்மான செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சிவகங்கை நகா் பகுதியில் செல்லும் உயரழுத்த மின் பாதையில் திங்கள்கிழமை ( நவ.1) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
இதனால், சிவகங்கை பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நகா் பகுதிகளில் அன்றைய தினம் காலை 8 முதல் காலை 10 மணி வரை மின் விநியோகம் இருக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.