மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம் எருக்கலை வெள்ளூர் கிராமத்தில் பகுதிநேர நியாய விலை கடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் சின்னையா விழாவிற்குத் தலைமை தாங்கினார். மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி விழாவில் கலந்துகொண்டு நியாயவிலைக் கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட திமுக துணை செயலாளர் த.சேங்கைமாறன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் மூர்த்தி, திமுக ஒன்றியச் செயலாளர் கடம்பசாமி, நகரச் செயலாளர் நாகூர்கனி, ஊராட்சி மன்றத் தலைவர் ரவி, ஒன்றியக் கவுன்சிலர் சுப்பையா, கூட்டுறவு சங்க செயலாளர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர. நிகழ்ச்சி முடிவில் கூட்டுறவு வருவாய் ஆய்வாளர் ராம்குமார் நன்றி கூறினார்.