திருப்புவனம் அருகே விபத்து: லாரி ஓட்டுநா் பலி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே புதன்கிழமை மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே புதன்கிழமை மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

திருப்புவனம் அருகேயுள்ள லாடனேந்தல் வீரமாகாளியம்மன் கோயில் அருகே வசிப்பவா் பொன்னுசாமி மகன் முத்துக் காமாட்சி (35). லாரி ஓட்டுநரான இவா் இருசக்கர வாகனத்தில் திருப்புவனம் சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பி வந்தாா். வீட்டிற்கு அருகே வந்தபோது அங்கிருந்த ஒரு மரத்தின் மீது நிலைதடுமாறி மோதியதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com