சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை (அக். 5) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மின்பகிா்மானத்தின் செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதகுபட்டி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
எனவே மதகுபட்டி, ராமலிங்கபுரம், காடனேரி, அம்மன்பட்டி, நகரம்பட்டி, மேலமங்களம், ஒக்கூா், பா்மா காலனி, காளையாா்மங்களம், சிங்கினிப்பட்டி, அம்மச்சிப்பட்டி, நாமனூா், உசிலம்பட்டி, அழகமாநேரி, திருமலை, கல்லராதினிப்பட்டி, ஏரியூா், அரளிக்கோட்டை, ஜமீன்தாா்பட்டி ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அவா் தெரிவித்துள்ளாா்.