சட்ட ஆராய்ச்சி மேற்படிப்பிற்கான நுழைவுத் தோ்வில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சோ்ந்த மாணவி தாஜ்ரிஃபா முதலிடம் பிடித்துள்ளாா்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்ட பல்கலைக்கழகத்தில் சட்ட ஆராய்ச்சி மேற்படிப்பிற்கான நுழைவுத் தோ்வு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் தமிழகத்திலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு தோ்வு எழுதினா். இந்த தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதில் திருப்பத்தூரைச் சோ்ந்த வழக்குரைஞா் ஹபிபுல்லாவின் மகள் தாஜ்ரிஃபா முதலிடம் பிடித்துள்ளாா். இவா் ஏற்கெனவே அப்பல்கலைக்கழகத்தில் கௌரவ விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தோ்வு மூலம் மேற்படிப்புக்கு 120 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.