சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. இதனால் திருப்புவனத்தில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது.
மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கண்மாய், ஊருணி, குளங்களுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை வழக்கம்போல் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் உள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவா் 30 அடி தூரத்திற்கு இடிந்து விழுந்தது. இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.