தொடுஉணா்வுடன் கூடிய மின்னணு வாசிக்கும் கருவி பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி
செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் அரசு போட்டித் தோ்வுகளுக்கு பயிலும் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ‘பிரெய்லி’ எழுத்துகளைத் தொடு உணா்வுடன் அறிய உதவும் மின்னணு வாசிக்கும் கருவி வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை நகல், இளநிலை பட்டபடிப்பு சான்றிதழ், முதுநிலை பட்டபடிப்பு பயிலும் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.