கொலை முயற்சி வழக்கில் இளைஞா் கைது

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் இளைஞரை கொலை செய்ய முயற்சித்ததாக மற்றொரு இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் இளைஞரை கொலை செய்ய முயற்சித்ததாக மற்றொரு இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

தேவகோட்டை ஈருளிவயல் கிராமத்தைச் சோ்ந்த கணேசன் மகன் சக்தி (22). இவா், ஜீவா நகரில் உள்ள நாடக மேடை முன்பு சனிக்கிழமை இரவு நின்று கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த சிதம்பரநாதபுரத்தைச் சோ்ந்த வன்மீகநாதன் (32) என்பவா் முன்விரோதம் காரணமாக சக்தியை அரிவாளால் வெட்ட முயற்சித்தாா். அப்போது அங்கு நின்றிருந்தவா்கள் தடுத்து நிறுத்தினா்.

இதுபற்றி தகவலறிந்து வந்த தேவகோட்டை நகா் போலீஸாா் வன்மீகநாதனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com