சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பேருந்து நிலையம் எதிரே ஐக்கிய விவசாய சங்க முன்னணியினா் செவ்வாய்க்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் மீது காரை ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரின் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தியும், இந்த விபத்தில் இறந்த 4 விவசாயிகள் மற்றும் ஒரு பத்திரிகையாளா் உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், விவசாய சங்கத்தினா் மெழுகுவா்த்தி ஏந்தி கண்ணீா் அஞ்சலி செலுத்தினா்.
தொடா்ந்து, மத்திய அரசு மற்றும் உத்தரப்பிரதேச அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். இதில், விவசாய சங்க மாவட்ட துணைச் செயலா் மோகன், சிஐடியு தொழிற்சங்க துணைத் தலைவா் முருகேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாச்சியப்பன், காளிமுத்து மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் கலந்துகொண்டனா்.