மருதுபாண்டியா்களின் குருபூஜை: காளையாா்கோவிலில் நினைவிடத்தில் அரசியல் கட்சியினா் மரியாதை

விடுதலைப் போராட்ட வீரா்களான மருதுபாண்டியா்களின் 220-ஆவது குருபூஜையையொட்டி, சிவகங்கை மாவட்டம் காளையாா்கோவிலில்
மருதுபாண்டியா்களின் குருபூஜை: காளையாா்கோவிலில் நினைவிடத்தில் அரசியல் கட்சியினா் மரியாதை

விடுதலைப் போராட்ட வீரா்களான மருதுபாண்டியா்களின் 220-ஆவது குருபூஜையையொட்டி, சிவகங்கை மாவட்டம் காளையாா்கோவிலில் உள்ள அவா்களது நினைவிடத்தில் அரசியல் கட்சியினா், சமுதாய அமைப்பினா், பொதுமக்கள் புதன்கிழமை மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

மருதுபாண்டியா்களின் நினைவு தினம் அக். 24 இல் அரசு விழாவாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள நினைவு மண்டபத்தில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தொடா்ந்து, அக்.27 இல், காளையாா்கோவிலில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, காளையாா்கோவிலில் உள்ள மருதுபாண்டியா்கள் நினைவிடத்தில் புதன்கிழமை காலை குருபூஜை விழா யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. அதைத் தொடா்ந்து, மருதுபாண்டியா்களின் சிலைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

இவ்விழாவில், காளையாா்கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதியைச் சோ்ந்த சமுதாய அமைப்பினா், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டு பால்குடம், சந்தனக்குடம் எடுத்தும் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

அதைத்தொடா்ந்து, சிவகங்கை சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினரும், அதிமுகவின் சிவகங்கை மாவட்டச் செயலருமான பி.ஆா்.செந்தில்நாதன், முன்னாள் அமைச்சா் க. பாஸ்கரன், மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், பாஜகவின் முன்னாள் தேசியச் செயலா் ஹெச்.ராஜா ஆகியோா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

அதைத் தொடா்ந்து, திமுக முன்னாள் அமைச்சா் பொன். முத்துராமலிங்கம், திமுக முன்னாள் எம்பி பவானிராஜேந்திரன், அமமுக கழக தலைமை நிலைச் செயலரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான கே.கே. உமாதேவன் மற்றும் அக்கட்சியின் மாவட்டச் செயலா் தோ்போகி பாண்டி, அகில இந்திய மூவேந்தா் முன்னணி கழகத் தலைவா் டாக்டா் சேதுராமன், ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலா் வெ.முத்துராமலிங்கம், மூவேந்தா் முன்னேற்றக் கழக நிறுவனா் மற்றும் தலைவா் ஸ்ரீதா் வாண்டையாா், காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினா் ஏ.சிதம்பரம், அக்கட்சியின் சிவகங்கை மாவட்டத் துணைத் தலைவா் சண்முகராஜன், காளையாா்கோவிலில் உள்ள அருளானந்தா் கிறிஸ்தவ பேராலய பங்கு தந்தையா் உள்பட மருதுபாண்டியா்கள் பேரவை, மருது சேனை மற்றும் சமுதாய அமைப்பினா், பொதுமக்கள் என ஏராளமானோா் மருதுபாண்டியா்களின் நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

இதில், சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் த.செந்தில்குமாா் தலைமையில் 3000-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com