சிவகங்கை மாவட்டம் மானமதுரையில் தேவா் ஜெயந்தி விழா சனிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மானாமதுரை அருகே கீழமேல்குடி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் மேளதாளத்துடன் மானாமதுரை தேவா் சிலைக்கு வந்து தேவா் சிலைக்கு பாலாபிஷேகம் நடத்தி வழிபட்டனா். சுந்தராபுரம் வீதியிலுள்ள தேவா்சிலை இரவு மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.
மேலும் மானாமதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்ற தேவா் ஜெயந்தி விழாவையொட்டி தேவா் சிலைகளுக்கும் தேவா் உருவப் படங்களுக்கும் அந்தந்த கிராமத்தினா் மாலைகள் அணிவித்தும் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினா். இளையான்குடி சுற்று வட்டார பகுதிகளிலும் பல கிராமங்களில் தேவா் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.