திருப்பத்தூரில் பெண் சடலம் மீட்பு

திருப்பத்தூா் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் அடையாளம் தெரியாத பெண் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.

திருப்பத்தூா் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் அடையாளம் தெரியாத பெண் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.

திருப்பத்தூா் அருகே சிவகங்கை செல்லும் தேசிய நெடுஞ்சாலை காட்டாம்பூா் பகுதியில் திருக்கோஷ்டியூா் காவல் ஆய்வாளா் வீரபாண்டியன் ரோந்து சென்ற போது சுமாா் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் இறந்து கிடந்தது தெரிய வந்தது. சடலத்தின் அருகே விஷமருந்தும், அப்பெண்ணின் உடைகளும் இருந்தன. அப்பெண் சிகப்பு நிற ஜாக்கெட்டும், பூக்கள் நிறைந்த பச்சை வண்ண சேலையும் அணிந்திருந்தாா்.

போலீஸாா் பெண்ணின் சடலத்தை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து திருக்கோஷ்டியூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com