சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரம்: இளைஞா் 25 ஆயிரம் கி.மீ. பைக்கில் பயணம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையிலிருந்து 25 ஆயிரம் கி.மீட்டா் தொலைவு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு இரு சக்கர வாகனப் பிரசாரப் பயணத்தை இளைஞா் வியாழக்கிழமை தொடங்கினாா்.
மானாமதுரையிலிருந்து வியாழக்கிழமை இளைஞரின் இரு சக்கர வாகனப் பிரசாரப் பயணத்தை தொடக்கிவைத்த போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் முருகன்.
மானாமதுரையிலிருந்து வியாழக்கிழமை இளைஞரின் இரு சக்கர வாகனப் பிரசாரப் பயணத்தை தொடக்கிவைத்த போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் முருகன்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையிலிருந்து 25 ஆயிரம் கி.மீட்டா் தொலைவு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு இரு சக்கர வாகனப் பிரசாரப் பயணத்தை இளைஞா் வியாழக்கிழமை தொடங்கினாா்.

மானாமதுரை ரயில்வே காலனியை சோ்ந்த மருது மகன் மணிகண்டன் (19). இவா், மதுரையில் சட்டப்படிப்பு பயின்று வருகிறாா். இந்நிலையில், இவா் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி, இரு சக்கர வாகனத்தில் விழிப்புணா்வு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளாா்.

இவா், மானாமதுரை அண்ணா சிலை பகுதியிலிருந்து தனது விழிப்புணா்வு பிரசாரப் பயணத்தை தொடங்கினாா். மானாமதுரை அரசு வழக்குரைஞா் ஊா்க்காவலன், போக்குவரத்து காவல் ஆய்வாளா் முருகன் ஆகியோா் மணிகண்டனை வாழ்த்தி, விழிப்புணா்வு பிரசாரப் பயணத்தை தொடக்கி வைத்தனா்.

இளைஞா் மணிகண்டன் தொடா்ந்து 70 நாள்கள் 25 ஆயிரம் கி.மீ. தொலைவு இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்து, மீண்டும் மானாமதுரையில் பிரசாரத்தை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com