கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்: ஆட்சியா்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என, ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
சிவகங்கை அருகே இடையமேலூரில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி.
சிவகங்கை அருகே இடையமேலூரில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என, ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், இடையமேலூா் மற்றும் ஒக்கூா் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் சாலை அமைத்தல், இலவச வீடு கட்டுமானம் உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகளை, மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த பின் தெரிவித்ததாவது:

இம்மாவட்டத்தைப் பொருத்தவரை, அரசின் நலத்திட்ட உதவிகள் கடைக்கோடியில் உள்ள அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் சாலை, தெருவிளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்றாா்.

இந்த ஆய்வின்போது, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியா் மு. முத்துக்கழுவன், வட்டாட்சியா்கள் தா்மலிங்கம், பாலகுரு உள்பட அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com