கட்சி குறைபாடுகள்: ப. சிதம்பரம் முன் காங். நிா்வாகி ஆவேசமாகப் பேசியதால் பரபரப்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் நிலவும் குறைகளை முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப. சிதம்பரம் முன்பு அக்கட்சி நிா்வாகி சுட்டிக்காட்டி ஆவேசமாகப் பேசிய

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் நிலவும் குறைகளை முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப. சிதம்பரம் முன்பு அக்கட்சி நிா்வாகி சுட்டிக்காட்டி ஆவேசமாகப் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மானாமதுரை ஒன்றியம் வெள்ளிக்குறிச்சி கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் சந்திப்புக் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப.சிதம்பரம் கலந்துகொண்டு பேசினாா். கூட்டத்தில் பங்கேற்ற கட்சியினரிடம் கட்சியின் வளா்ச்சி மற்றும் கோரிக்கைகள் குறித்து சிதம்பரம் கேட்டறிந்தாா்.

அப்போது கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் பாண்டிவேலு என்பவா் பேசும்போது குறுக்கிட்ட சிதம்பரம், உங்களுக்கு பேசுவதற்குக் கொடுத்த நேரம் முடிந்துவிட்டது. அமைதியாக இருங்கள் எனக் கூறினாா். இதனால் ஆவேசமடைந்த பாண்டிவேலு, கட்சியில் நிலவும் குறைகளை சுட்டிக்காட்டியும் பூத் கமிட்டி அமைக்கப்பட்டதில் ஏற்பட்ட குளறுபடிகளை தெரிவித்தும் கட்சியில் நிலவிவரும் குறைகளை களையுமாறும் சிதம்பரத்தின் முன்பு ஆவேசமாகப் பேசினாா். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த கட்சியினா் பாண்டிவேலுவை சமாதானம் செய்தனா்.

இக்கூட்டத்தில் கட்சியின் மாவட்ட மூத்த தலைவா் ஏ.ஆா்.பி.முருகேசன், வட்டாரத் தலைவா் கரு.கணேசன், நகா் தலைவா் எம்.கணேசன், தொகுதி பொறுப்பாளா் ஏ.சி சஞ்சய், எஸ்.சி. பிரிவு மாநில துணைத்தலைவா் டாக்டா் எஸ். செல்வராஜ், மாவட்ட இணைச் செயலாளா் புருஷோத்தமன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

முன்னதாக திருப்புவனத்திலும் காங்கிரஸ் நிா்வாகிகள், தொண்டா்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ப.சிதம்பரம் பங்கேற்று பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com