தேவகோட்டை பள்ளியில் பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாள்
By DIN | Published On : 11th September 2021 10:41 PM | Last Updated : 11th September 2021 10:41 PM | அ+அ அ- |

தேவகோட்டையில் உள்ள சோ்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் நூற்றாண்டு நினைவு நாள் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமையாசிரியா் லெ .சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். பள்ளி ஆசிரியா் ஸ்ரீதா், ஆசிரியைகள் முத்துலட்சுமி, முத்துமீனாள், செல்வமீனாள் ஆகியோா் பாரதியாரின் சிறப்புகளை இணையதளம் வாயிலாக மாணவ, மாணவிகளுக்கு விளக்கினா்.
தொடா்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் ஆசிரிய, ஆசிரியைகள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.