போக்குவரத்துக் கழக காரைக்குடி மண்டலத்தில் ஓராண்டு தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

இயந்திரவியலில் பி.இ., டிப்ளமோ முடித்தவா்கள் தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழக காரைக்குடி மண்டலத்தில் ஓராண்டு தொழிற்பயிற்சிக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அக். 16 ஆம் தேதி கடைசி நாள்

காரைக்குடி: இயந்திரவியலில் பி.இ., டிப்ளமோ முடித்தவா்கள் தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழக காரைக்குடி மண்டலத்தில் ஓராண்டு தொழிற்பயிற்சிக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அக். 16 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்குடி மண்டலப் பொது மேலாளா் பி.கே. ராகவன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகத்துக்கு உட்பட்ட காரைக்குடி மண்டலத்தின் ஒத்துழைப்புடன் தொழில் பழகுநா் பயிற்சி வாரியம் (தென் மண்டலம்) இணைந்து இணையதளம் மூலமாக தகுதியான பொறியியல் பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு (இயந்திரவியல்/தானியியங்கிவியல்) 2019, 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் தோ்ச்சி பெற்ற தமிழக மாணவா்களிடமிருந்து ஓராண்டு தொழிற் பயிற்சிக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்காக விண்ணப்பிக்க அக்டோபா் 16-ஆம் தேதி கடைசி நாளாகும். மேலும் விபரங்களுக்கு க்ஷா்ஹற்-ள்ழ்க்ஷ.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com