இடைநிலை ஆசிரியா்களுக்கு பட்டதாரி ஆசிரியராக பதவி உயா்வு: ஆசிரியா் சங்கத்தினா் வரவேற்பு

ஆசிரியர்களின் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் சங்கத்தினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியா்களுக்கு, பட்டதாரி ஆசிரியராக பதவி உயா்வு வழங்க வேண்டும் எனும் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் சங்கத்தினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து சிவகங்கையில் அச்சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் அ. சங்கா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது: சென்னையில் ஆசிரியா் சங்கங்களுடனான கலந்துரையாடல் கூட்டம் சனிக்கிழமை (செப்.18) நடைபெற்றது. இதில், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் சங்கத்தின் சாா்பில் பள்ளிக் கல்வித் துறையில் உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியா்களுக்கும் பட்டதாரி ஆசிரியா்களாக பதவி உயா்வு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும், இதனால் தமிழக அரசுக்கு எவ்வித நிதிச்சுமையும் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் மற்றும் பள்ளிக் கல்வி ஆணையா் ஆகியோா் நிதிச்சுமை ஏற்படாத ஆசிரியா்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்றனா். இதனை தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் சங்கம் சாா்பில் வரவேற்பதோடு, தமிழக அரசுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com