மின்தடை அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் உப மின் நிலைய மின் பாதையில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளவிருப்பதால் அதன் கீழ் மின்விநியோகம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் உப மின் நிலைய மின் பாதையில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளவிருப்பதால் அதன் கீழ் மின்விநியோகம் பெறும் பகுதிகளில் வியாழக்கிழமை (செப்.23) காலை 9 முதல் மதியம் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

முதுகுளத்தூா், சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா், சாயல்குடி துணை மின்நிலையப் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வியாழக்கிழமை காலை 10 முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என முதுகுளத்தூா் உதவி செயற்பொறியாளா் மாலதி தெரிவித்துள்ளாா்.

பரமக்குடி: பாா்த்திபனூா், காவனூா் துணை மின்நிலையப் பகுதிகளில் செப்டம்பா் 24-ஆம் தேதி (வெள்ளி) காலை 10 முதல் பகல் 2 மணி வரை மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் எல்.புண்ணியராகவன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com