சிவகங்கை மாவட்டம், அலவாக்கோட்டை அருகே உள்ள சருகனியாறு தூா்வாரும் பணி தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இப்பணியினை ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்து தொடக்கி வைத்து பேசியதாவது: இம்மாவட்டத்தில் ஆறுகள், வரத்துக் கால்வாய் மற்றும் வடிகால் வாய்க்கால் உள்ளிட்ட நீா்நிலைகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, அலவாக்கோட்டை பெரிய கண்மாய் கலுங்கிலிருந்து தொடங்கும் சருகனியாறு தூா்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சுமாா் 24 கிலோ மீட்டா் தொலைவு உள்ள இந்த ஆற்றின் மூலம் 18 பாசனக் கண்மாய்களுக்கான பாசன வசதி மேம்படுத்தப்படும். இதன்மூலம், வேளாண் பணிகள் மட்டுமன்றி குடிநீா் ஆதாரங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், சருகனியாறு செயற்பொறியாளா் வெங்கடகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளா்கள் கண்ணன், முத்துராமலிங்கம், அலவாக்கோட்டை ஊராட்சித் தலைவா் பிரகாசம் மற்றும் அரசு அலுவலா்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.